Categories: தமிழகம்

எங்க சார் ரொம்ப நல்லவரு.. அவர உடனே விடுதலை செய்யுங்க : போக்சோவில் கைதான ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் மறியல்!!

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் வரலாற்று ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஆசிரியரை விடுவிக்க கோரி மாணவிகள் மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்தவர் ராஜ்குமார். 52 வயதான இவர் மதுக்கூர் தாலூகா நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 17ம் தேதியன்று இந்த பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் 17 வயது மாணவி ஒருவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது கால் சூப்பர்வைசராக ராஜ்குமார் இருந்திருக்கிறார் . அப்போது மாணவியின் மேஜை அருகே நாற்காலியைப் போட்டுக் கொண்டு அவரது காலை சீண்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் மதுக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இந்த புகார் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து ஆசிரியர் ராஜ்குமாரை போலீசார் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்து சிறையில்அடைத்தனர். தஞ்சாவூர் சிலையில் உள்ள ஆசிரியர் ராஜ்குமார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ராஜ்குமார் ஆசிரியர் நல்லவர் என்றும், அவர் மீது வேண்டுமென்றே பாலியல் புகார் அளிக்கப்படடுள்ளது. அவரை உடனே விடுதலை செய்து இதே பள்ளியில் ஆசிரியராக பணியமர்த்த வேண்டும் என மாணவிகள் பள்ளி முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திடீர் சாலை மறியல் போராட்டத்தால் மதுக்கூர் – மன்னார்குடி இடையே கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடந்த மறியலால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர், டிஎஸ்பி செங்கமலக்கண்ணன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

ராட்சசி படத்தில் வருவது போல ஒரு ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி மாணவிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் சக ஆசிரியர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

13 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

14 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

15 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

15 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

16 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

17 hours ago

This website uses cookies.