Categories: தமிழகம்

கல்லறைத் தோட்டத்தில் இருந்து இளைஞர் சடலமாக மீட்பு… நெல்லையில் பயங்கரம்!!!

நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்லறை தோட்டத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலையான வாலிபர் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் உயிரிழந்த வாலிபர் நெல்லை கே.டி.சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் போலீசார் அவர் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்திய நிலையில் பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துஹரி என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இவர் இருப்பது தெரியவந்தது.

அந்த கொலை வழக்கில் ஜோஸ் உட்பட கொலை வழக்கில் தொடர்புடைய நான்கு பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் இந்த கல்லறை தோட்டத்தில் மது அருந்த வந்ததாகவும் அப்போது இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா ஆய்வு நடத்தினார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக பிடிக்கவும் உத்தரவிட்ட நிலையில் போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும் கல்லறை தோட்டத்தில் நடந்த கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.