தமிழகம்

திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!

திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து, புயல் கரையைக் கடந்த நேற்று, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.

இதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சில இடங்களில் சூழ்ந்த மழைநீரில் தத்தளித்த பொதுமக்களை, தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வந்தனர். அப்போது, நாய், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் அவர்கள் மீட்டனர்.

அந்த வகையில், திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு விழுந்ததில், 2 வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.

இதன் காரணமாக, இந்த வீடுகளில் வசித்து வந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலையே நடைபெற்றதால், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஆனால், அவர்களால் மீட்புப் பணியைத் தொடர முடியவில்லை.

இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்குச் சென்றனர். இருப்பினும், இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் துவங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலையே பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: “இட்லிக்கடை”படத்தின் தனுஷ் கெட்டப் கவனிச்சீங்களா…வைரலாகும் புகைப்படம்..!

மேலும், மோப்ப நாய்கள் உதவி உடன் வீடு இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. அதேநேரம், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகளை மழை வெள்ள நீர் சூழ்ந்ததால் , மீட்புப் படையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.