தமிழகம்

திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!

திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து, புயல் கரையைக் கடந்த நேற்று, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.

இதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சில இடங்களில் சூழ்ந்த மழைநீரில் தத்தளித்த பொதுமக்களை, தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வந்தனர். அப்போது, நாய், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் அவர்கள் மீட்டனர்.

அந்த வகையில், திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு விழுந்ததில், 2 வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.

இதன் காரணமாக, இந்த வீடுகளில் வசித்து வந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலையே நடைபெற்றதால், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஆனால், அவர்களால் மீட்புப் பணியைத் தொடர முடியவில்லை.

இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்குச் சென்றனர். இருப்பினும், இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் துவங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலையே பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: “இட்லிக்கடை”படத்தின் தனுஷ் கெட்டப் கவனிச்சீங்களா…வைரலாகும் புகைப்படம்..!

மேலும், மோப்ப நாய்கள் உதவி உடன் வீடு இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. அதேநேரம், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகளை மழை வெள்ள நீர் சூழ்ந்ததால் , மீட்புப் படையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.