நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அவர்களது திருமணத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்காக கடற்கரையோரம் பிரம்மாண்ட செட்டும் அமைக்கப்பட்டு உள்ளதாம்.
இவர்களது திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதனை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் இதனை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கவுதம் மேனனிடம் வழங்கி உள்ளது.
இவர்களது திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளதாம். குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன்களை கொண்டுவரக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அதில் அடங்குமாம். படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதால் திருமணம் குறித்த வீடியோ எதுவும் லீக் ஆகிவிடக் கூடாது என்பதன் காரணமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், இவர்களது திருமணத்திற்கு வர சில பிரபலங்கள் தயக்கம் காட்டி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் நடிகை கத்ரீனா கைஃப் – நடிகர் விக்கி கவுஷல் திருமணத்திலும் இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
This website uses cookies.