வழக்கு போடுவதாக மிரட்டும் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி : கோவை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தல்!
கோவை மாநகராட்சியில் புதிய ஆணையராக பொறுப்பேற்ற சிவகுரு பிரபாகரன் அவர்கள் சாலை பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அப்போது அவை தரமற்ற முறையில் இருப்பதாக அபராதம் விதித்தார். ஒப்பந்ததாரர்கள் அதை சரி செய்த பின் பில் தொகையை பெற்றுக் கொண்டனர்.
இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி அவர்கள், ஒப்பந்ததாரர்களை மறைமுகமாக தொடர்பு கொண்டு, தரமற்ற சாலைகளை அமைத்துள்ளதால் உங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்ய முடியும். அதை தவிர்க்க லஞ்சம் கேட்டு FACE TIME கால் மூலம் வந்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் மற்றும் KCP Infra Limited நிறுவனத்தின் தலைவருமான K.Chandraprakash அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாவது, ஒப்பந்ததாரர்களால் அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளதாக ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் அபராதம் விதிக்கிறார்கள்.
ஆனால் தரமற்ற பணிகளை மேற்கொண்டதால் லஞ்ச ஒழிப்பு வழக்கை பதிவு செய்ய முடியும் என ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.
அப்படி ஒப்பந்தாரர்களை மிரட்டும் அதிகாரிகளுக்கு பயப்பட்டு பணத்தை கொடுக்க வேண்டாம். எந்த புகார் வந்தாலும் நமது ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தில் புகாரை தெரிவிக்க வேண்டும்.
மொபைல் காலில் உங்களுக்கு மிரட்டல் வந்தால் அந்த ஆடியோவை ஆதாரமாக கொடுத்து புகார் கொடுக்கலாம். டிராக் செய்ய முடியாதபடி FACE TIME காலிலோ, வாட்ஸ் அப் காலிலோ வந்தால் அதற்கும் தற்போது செயலிகள் உள்ளது என்றும், தங்களுக்காக எப்போதும் நலச்சங்கம் துணை நிற்கும் என அவர் கூறியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.