Categories: தமிழகம்

வழக்கு போடுவதாக மிரட்டும் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி : கோவை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தல்!

வழக்கு போடுவதாக மிரட்டும் ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி : கோவை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் அறிவுறுத்தல்!

கோவை மாநகராட்சியில் புதிய ஆணையராக பொறுப்பேற்ற சிவகுரு பிரபாகரன் அவர்கள் சாலை பணிகள் மற்றும் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது அவை தரமற்ற முறையில் இருப்பதாக அபராதம் விதித்தார். ஒப்பந்ததாரர்கள் அதை சரி செய்த பின் பில் தொகையை பெற்றுக் கொண்டனர்.

இதற்கிடையில், லஞ்ச ஒழிப்புத்துறையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி அவர்கள், ஒப்பந்ததாரர்களை மறைமுகமாக தொடர்பு கொண்டு, தரமற்ற சாலைகளை அமைத்துள்ளதால் உங்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்ய முடியும். அதை தவிர்க்க லஞ்சம் கேட்டு FACE TIME கால் மூலம் வந்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் மற்றும் KCP Infra Limited நிறுவனத்தின் தலைவருமான K.Chandraprakash அவர்கள் அறிவுறுத்தியுள்ளதாவது, ஒப்பந்ததாரர்களால் அமைக்கப்படும் சாலைகள் தரமற்ற நிலையில் உள்ளதாக ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள் அபராதம் விதிக்கிறார்கள்.

ஆனால் தரமற்ற பணிகளை மேற்கொண்டதால் லஞ்ச ஒழிப்பு வழக்கை பதிவு செய்ய முடியும் என ஓய்வு பெற்ற முன்னாள் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

அப்படி ஒப்பந்தாரர்களை மிரட்டும் அதிகாரிகளுக்கு பயப்பட்டு பணத்தை கொடுக்க வேண்டாம். எந்த புகார் வந்தாலும் நமது ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தில் புகாரை தெரிவிக்க வேண்டும்.

மொபைல் காலில் உங்களுக்கு மிரட்டல் வந்தால் அந்த ஆடியோவை ஆதாரமாக கொடுத்து புகார் கொடுக்கலாம். டிராக் செய்ய முடியாதபடி FACE TIME காலிலோ, வாட்ஸ் அப் காலிலோ வந்தால் அதற்கும் தற்போது செயலிகள் உள்ளது என்றும், தங்களுக்காக எப்போதும் நலச்சங்கம் துணை நிற்கும் என அவர் கூறியுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

7 minutes ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

27 minutes ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

1 hour ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

2 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

2 hours ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

3 hours ago

This website uses cookies.