கோயில் சொத்தில் கை வைத்தால்.. ஓய்வு பெற்ற காவல் தலைவர் பொன் மாணிக்கவேல் எச்சரிக்கை!!
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட சாத்தனூர் திருமூலர் அவதார தலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரு பூஜை விழாவில் பங்கேற்ற பொன். மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: சேர, சோழர் காலத்து சொத்துகளிலிருந்து மாதந்தோறும் வரும் ரூ. 28 கோடி வருமானத்தைக் கொண்டு, அறநிலையத் துறை அமைச்சர் உள்பட அத்துறையிலுள்ள அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையை ஊதியமாக வழங்குவது சரியா, தவறா என்பதை அடுத்த முறை பேசுகிறேன்.
கடந்த ஒரு வாரமாக என்னைப் பற்றி சிலர் அவதூறாக பேசுகின்றனர். இதற்கு தமிழக அரசின் தூண்டுதல்தான் காரணம். கோயிலில் கை வைத்தால் நாங்கள் எதிர்ப்போம்.
அதேபோல, திருட்டு போன கோயில் சிலைகளை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், எங்கள் மூச்சு உள்ளவரை போராடுவோம் என்றார் பொன் மாணிக்கவேல்.
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
This website uses cookies.