கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 4 இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜாய். இவர் தனக்கு சொந்தமான ஆல்டோ காரில் இன்று மாலை காட்டாத்துறை பகுதிக்கு சென்றுள்ளார். காரை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில், காரானது நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகியமண்டபம் பகுதியில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, மீண்டும் வேகமாக சாலையின் நடுவே சென்று நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிக்கப்பட்ட நிலையில், காரில் இருந்த ஜாய் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதி வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.