கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 4 இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜாய். இவர் தனக்கு சொந்தமான ஆல்டோ காரில் இன்று மாலை காட்டாத்துறை பகுதிக்கு சென்றுள்ளார். காரை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில், காரானது நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகியமண்டபம் பகுதியில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, மீண்டும் வேகமாக சாலையின் நடுவே சென்று நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிக்கப்பட்ட நிலையில், காரில் இருந்த ஜாய் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதி வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.