Categories: தமிழகம்

ரோடு ஷோ நடத்தக்கூடாது : பாஜக தலைவர் நட்டா பேரணிக்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுப்பு!!

ரோடு ஷோ நடத்தக்கூடாது : பாஜக தலைவர் நட்டா பேரணிக்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுப்பு!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வர உள்ளனர்.

இந்த நிலையில், திருச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நாளை நடைபெற இருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட் முதல் மலைக்கோட்டை வரை வாகன பேரணி நடத்த பாஜக அனுமதி கோரியிருந்தது. ஆனால், சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை காரணம் காட்டி, காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர் அனுமதி மறுப்பு தெரிவித்தனர்.

இதனால், ரோடுஷோ நடத்த மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்கும்படி பாஜகவை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 36 மணி நேரத்துக்கு முன்பாக ஆன்லைனில் அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.