Categories: தமிழகம்

கதவுகளை திறந்து வைக்கும் வீடுகளை குறிவைக்கும் டவுசர் கொள்ளையர்கள்: ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கும் போலீசார்…நாமக்கல்லில் அதிர்ச்சி..!!

நாமக்கல்: இரவுநேரத்தில் கதவுகளை திறந்து வைத்து தூங்கும் பொதுமக்களின் வீடுகளை குறிவைத்து டவுசர் கொள்ளையர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியில் கேபிள் ஆபரேட்டர் வேலு என்பவரது வீட்டில் கடந்த 5ம் தேதி இரவு 9 சவரன் நகை கொள்ளை போன நிலையில், அடுத்தநாள் 6ம் தேதி இரவும், அதேப் பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வரும் வினோத் – நதியா தம்பதியினர் வீட்டில் 4 சவரன் நகையும், ஆரியமாலா வீட்டில் 3 சவரன் நகையும் கொள்ளை போனது.

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் திறந்திருக்கும் வீட்டிற்குள் புகுந்து, எந்தவித சத்தமும் போடாமல் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் இல்லாமல் மிரட்டி நகைகளை அடுத்தடுத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தபோது, டவுசர் அணிந்த கொள்ளையர்கள் முகமூடி அணிந்து கொண்டு நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தச்சம்பவங்கள் குறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருவதுடன், பொதுமக்கள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை திறந்து வைத்து தூங்க வேண்டாம் எனவும் எச்சரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரன் தேஜஸ்வியிடம் கேட்ட போது, விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

9 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

10 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

10 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

11 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

12 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

12 hours ago

This website uses cookies.