மதுரை: விருதுநகரில் டாஸ்மாக் கடையை துளையிட்டு பல ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் பனைநகரில் அரசு மதுபான டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல் மதுபான விற்பனையார் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று திறக்க வந்து திறந்து பார்த்த போது கடையை துவாரம் போட்டு மதுபான பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பல ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில் பெட்டில்கள், மற்றும் பல ரக மதுபானபாட்டில் பெட்டிகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எதுவும் தடயம் சிக்கியுள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.
மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.