திருப்பூர் மண்ணரையைச் சேர்ந்தவர் குப்புசாமி. பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார் . இவர் சேலத்தில் இருந்து பஸ்சில் ஏறி மண்ணரைக்கு வந்தார் .
அப்போது அவரது கைப்பையில் ரூ .65 ஆயிரம் வைத்திருந்தார் . மண்ணரை பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்கி பார்த்த போது பையில் இருந்த பணத்தை காணவில்லை.
உடனடியாக திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். திருப்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணையை துவக்கினர். பஸ்சில் குப்புசாமிக்கு அருகே பக்கத்தில் இருக்கையில் இரு பெண்கள் பயணம் செய்தனர் .
இதனால் அவர்கள் திருடி இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கினார்கள். இதில் அந்தப் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த வாணி, வைதேகி மற்றும் சாய் ஆகியோர் கவனத்தை திசை திருப்பி பையில் இருந்த ரூ .65 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது .
அவர்களிடமிருந்து ரூ.65 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் . பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் .
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
டாப் நடிகர் அஜித் படத்தில் நடிப்பது என்பது பலருக்கும் கனவே. பலரும் அஜித் படத்தில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டிவிட…
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
This website uses cookies.