நெல்லை நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனத்திலிருந்து இறங்கி ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறிய திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவரான ராக்கெட் ராஜா இரண்டு கொலை வழக்கு மற்றும் பேருந்து எரித்த வழக்கு சம்பந்தமாக நெல்லை நீதிமன்றத்திற்கு கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்திருந்தார் .
இதற்காக அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் இருந்து நீதிமன்றத்திற்கு வரும்பொழுது திசையன்விளை காவல்துறையினர் அவருக்கு நெல்லை காவல் மாவட்ட எல்கை வரையில் பாதுகாப்பு அளித்தனர் .
அந்த வாகனத்தில் திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி நெல்லை நீதிமன்ற அலுவல் வேலைக்காக அதே பாதுகாப்பு வாகனத்தில் ஏறி வந்துள்ளார்..
மாநகர எல்லைக்குள் வந்தவுடன் திசையன்விளை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை நெல்லை மாநகர காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ராக்கெட் ராஜாவுக்கு பாதுகாப்பு அளித்து நெல்லை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் நீதிமன்ற அலுவலக பணிக்காக திசையன்விளையை காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாநகர பாதுகாப்பு காவல் வாகனத்தில் ஏறாமல் ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறி நீதிமன்றம் சென்றுள்ளார் .
இதனை அடுத்து வந்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.