தமிழகம்

ஃபார்மில் இல்லைதான்.. ஆனால்.. கட் அன்ட் டைட்டாக பேசிய ரோகித் சர்மா!

நான் ஓய்வு பெறப் போவதில்லை, அதேநேரம், இந்த முடிவை வெளியில் இருந்து யாரும் எடுத்து விட முடியாது என ரோகித் சர்மா கூறினார்.

சிட்னி: இது தொடர்பாக சிட்னியில் பேட்டியளித்த இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, “நான் ஃபார்மில் இல்லை, என்னால் ரன்கள் எடுக்க முடியவில்லை. 5வது டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே, நான் கடைசிப் போட்டியில் இருந்து விலக முடிவெடுத்தேன். இது குறித்து பயிற்சியாளர், தேர்வாளரிடம் கூறினேன்.

அவர்கள் என்னுடைய முடிவை ஏற்றுக் கொண்டனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்குப் பிறகே, இந்த சிந்தனை எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதிகமான ரன்கள் அடித்தும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே, இந்தப் போட்டியில் இருந்து ஒதுங்குவது எனக்கு முக்கியமானது என நான் கருதினேன்.

நான் ஓய்வு முடிவை எடுக்கவிலை. ஓய்வு பெறப் போவதில்லை. கடைசி போட்டியில் இருந்து தான் விலகி உள்ளேன். 5 மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த தொடரில் நான் ரன்கள் அடிக்காததால், 5 மாதங்களுக்குப் பிறகும் நான் இப்படியே ரன்கள் அடிக்காமல் இருப்பேன் என்பதைச் சொல்ல முடியாது.

ஏனென்றால், ஒவ்வொரு நாளும் வாழ்க்கை என்பது மாறுகிறது. நான் என்னை நம்புகிறேன். நான் யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் நீண்ட காலம் விளையாடி வருகின்றேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து எவரும் முடிவு செய்ய முடியாது.

இதையும் படிங்க: புத்தாண்டில் முதல் முறையாக குறைந்த தங்கம் விலை!

நான் விவேகமானவன், முதிர்ச்சி அடைந்தவன். 2 குழந்தைகளுக்கு நான் தந்தை. வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறினார். முன்னதாக, ரோகித் சர்மா ஃபார்மில் இல்லை என்றும், அவரால் 50 ரன்களுக்கு உள்ளாகவே அடிக்க முடிந்துள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.