தமிழகம்

ஃபார்மில் இல்லைதான்.. ஆனால்.. கட் அன்ட் டைட்டாக பேசிய ரோகித் சர்மா!

நான் ஓய்வு பெறப் போவதில்லை, அதேநேரம், இந்த முடிவை வெளியில் இருந்து யாரும் எடுத்து விட முடியாது என ரோகித் சர்மா கூறினார்.

சிட்னி: இது தொடர்பாக சிட்னியில் பேட்டியளித்த இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, “நான் ஃபார்மில் இல்லை, என்னால் ரன்கள் எடுக்க முடியவில்லை. 5வது டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே, நான் கடைசிப் போட்டியில் இருந்து விலக முடிவெடுத்தேன். இது குறித்து பயிற்சியாளர், தேர்வாளரிடம் கூறினேன்.

அவர்கள் என்னுடைய முடிவை ஏற்றுக் கொண்டனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்குப் பிறகே, இந்த சிந்தனை எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதிகமான ரன்கள் அடித்தும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே, இந்தப் போட்டியில் இருந்து ஒதுங்குவது எனக்கு முக்கியமானது என நான் கருதினேன்.

நான் ஓய்வு முடிவை எடுக்கவிலை. ஓய்வு பெறப் போவதில்லை. கடைசி போட்டியில் இருந்து தான் விலகி உள்ளேன். 5 மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த தொடரில் நான் ரன்கள் அடிக்காததால், 5 மாதங்களுக்குப் பிறகும் நான் இப்படியே ரன்கள் அடிக்காமல் இருப்பேன் என்பதைச் சொல்ல முடியாது.

ஏனென்றால், ஒவ்வொரு நாளும் வாழ்க்கை என்பது மாறுகிறது. நான் என்னை நம்புகிறேன். நான் யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் நீண்ட காலம் விளையாடி வருகின்றேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து எவரும் முடிவு செய்ய முடியாது.

இதையும் படிங்க: புத்தாண்டில் முதல் முறையாக குறைந்த தங்கம் விலை!

நான் விவேகமானவன், முதிர்ச்சி அடைந்தவன். 2 குழந்தைகளுக்கு நான் தந்தை. வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறினார். முன்னதாக, ரோகித் சர்மா ஃபார்மில் இல்லை என்றும், அவரால் 50 ரன்களுக்கு உள்ளாகவே அடிக்க முடிந்துள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

3 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

3 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

3 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

4 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

5 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

5 hours ago

This website uses cookies.