தமிழகம்

ஃபார்மில் இல்லைதான்.. ஆனால்.. கட் அன்ட் டைட்டாக பேசிய ரோகித் சர்மா!

நான் ஓய்வு பெறப் போவதில்லை, அதேநேரம், இந்த முடிவை வெளியில் இருந்து யாரும் எடுத்து விட முடியாது என ரோகித் சர்மா கூறினார்.

சிட்னி: இது தொடர்பாக சிட்னியில் பேட்டியளித்த இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, “நான் ஃபார்மில் இல்லை, என்னால் ரன்கள் எடுக்க முடியவில்லை. 5வது டெஸ்ட் போட்டி எங்களுக்கு மிக முக்கியமானது. எனவே, நான் கடைசிப் போட்டியில் இருந்து விலக முடிவெடுத்தேன். இது குறித்து பயிற்சியாளர், தேர்வாளரிடம் கூறினேன்.

அவர்கள் என்னுடைய முடிவை ஏற்றுக் கொண்டனர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்குப் பிறகே, இந்த சிந்தனை எனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அதிகமான ரன்கள் அடித்தும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை. எனவே, இந்தப் போட்டியில் இருந்து ஒதுங்குவது எனக்கு முக்கியமானது என நான் கருதினேன்.

நான் ஓய்வு முடிவை எடுக்கவிலை. ஓய்வு பெறப் போவதில்லை. கடைசி போட்டியில் இருந்து தான் விலகி உள்ளேன். 5 மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த தொடரில் நான் ரன்கள் அடிக்காததால், 5 மாதங்களுக்குப் பிறகும் நான் இப்படியே ரன்கள் அடிக்காமல் இருப்பேன் என்பதைச் சொல்ல முடியாது.

ஏனென்றால், ஒவ்வொரு நாளும் வாழ்க்கை என்பது மாறுகிறது. நான் என்னை நம்புகிறேன். நான் யதார்த்தமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் நீண்ட காலம் விளையாடி வருகின்றேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் அல்லது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து எவரும் முடிவு செய்ய முடியாது.

இதையும் படிங்க: புத்தாண்டில் முதல் முறையாக குறைந்த தங்கம் விலை!

நான் விவேகமானவன், முதிர்ச்சி அடைந்தவன். 2 குழந்தைகளுக்கு நான் தந்தை. வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்” எனக் கூறினார். முன்னதாக, ரோகித் சர்மா ஃபார்மில் இல்லை என்றும், அவரால் 50 ரன்களுக்கு உள்ளாகவே அடிக்க முடிந்துள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

3 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

4 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

4 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

5 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

5 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

6 hours ago

This website uses cookies.