புதுச்சேரியில் மதுபோதையில் செல்போன் கடையில் சிகரெட் கேட்டு உரிமையாளரை தாக்கி அவரது செல்போனை பறித்து சென்ற பிரபல ரவுடி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் வசித்து வருபவர் அர்சுனன் (20). இவர் புதிய பேருந்து நிலையம் அருகே செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு அர்ச்சுனன் கடையை அடைத்து கொண்டிருந்த போது இரண்டு நபர்கள் மது போதையில் கடைக்கு வந்துள்ளனர்.
செல்போன் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது அர்சுனன் இது செல்போன் பழுது பார்க்கும் கடை இங்கு சிகரெட் இல்லை என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர்.
இது குறித்து அர்ச்சுனன் உருளையான்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பறித்து செல்லப்பட்ட செல்போன் எண்ணின் சிக்னலை ட்ராக் செய்து இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி கட்ட கார்த்திக் என்கிற கார்த்திகேயன் மற்றும் அவனது கூட்டாளி அரவிந்த் குமார் என்பதும் தெரியவந்துள்ளது. குடிபோதையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள கட்ட கார்த்திக் மீது புதுச்சேரியில் கொலை, அடிதடி உள்ளிட்ட 5க்கும் மேற்ப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.