தமிழகம்

மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? 2 மாதங்களில் தொடர் சம்பவங்கள்!

மங்களூரு எக்ஸ்பிரஸ் சென்ற அம்பத்தூர் அடுத்து தண்டவாளத்தில் கிடந்த சிமெண்ட் செங்கல் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்று நேற்று முன்தினம் (நவ.4) இரவு புறப்பட்டு உள்ளது. பின்னர், இந்த ரயில் அம்பத்தூர் ரயில் நிலையத்தைக் கடந்தபோது, அம்பத்தூர் – திருமுல்லைவாயில் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் பெரிய சிமெண்ட் கலந்த செங்கல் வைக்கப்பட்டிருந்ததை ரயில் லோகோ பைலட் பார்த்து உள்ளார்.

இதனையடுத்து, அவர் உடனடியாக இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து உள்ளார். பின்னர், அங்கு இருந்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் பேரில், ஆவடி ரயில்வே போலீசார் சென்று, தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 3 கிலோ எடை கொண்ட சிமென்ட் செங்கலை தண்டவாளத்தில் இருந்து அகற்றி உள்ளனர்.

இதனையடுத்து, அன்று இரவு முதல் நேற்று காலையும் சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீசார், தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், லோகோ பைலட் அளித்த தகவலின் அடிப்படையில், இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்த சிமெண்ட் செங்கலை ரயில்வே தண்டவாளத்தில் வைத்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், விரைவு ரயில் பாதையில் சிமெண்ட் கல்லை வைத்து, ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கடந்த நவம்பர் 1ஆம் தேதி மாலை, தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து பொதிகை விரைவு ரயில் வழக்கம்போல் புறப்பட்டது. இதனையடுத்து, அந்த ரயில் கடையநல்லூர் வழியாக சென்று கொண்டிருந்த பொழுது, ரயில் தண்டவாளத்தின் மீது 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டதை லோகோ பைலட் பார்த்துள்ளார். பின்னர், அவர் அளித்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொள்கின்றனர்.

மேலும், செப்டம்பர் 26ஆம் தேதி இதே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தபோது, கடையநல்லூர் – பாம்பகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி என்ஜினின் முன்பக்க தகடு சேதம் அடைந்தது. பின்னர், இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து அருகில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வந்த இருவரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தெலுங்கானாவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு.. எப்போது முடியும்?

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.