திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஆலய திருப்பணி ஆய்வறிக்கை வழங்க
1 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய தொல்லியல் துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயில் பிரசித்தி பெற்ற வைணவ தலமாகும். இதன் பரம்பரை டிரஸ்டியாக இருந்து வருபவர் பிச்சுமணி ஐயங்கார்.
கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கும் மேலானதால், பக்தர்கள் உதவியுடன் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பணி தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையில் முறையாக அனுமதியும் பெறப்பட்டது.
ஆயினும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட State level expert committee என்ற கமிட்டியில் ஆய்வறிக்கை பெறவேண்டியது கட்டாயம் என்பதால்
அக்கமிட்டி உறுப்பினரும் தொல்லியல் துறை வல்லுனருரான மூர்த்தீஸ்வரியை அணுகி ஆய்வறிக்கை கேட்டபோது ஆய்வறிக்கை வழங்க மூர்த்தீஸ்வரி 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆயினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிச்சுமணி ஐயங்கார் இது குறித்து ஒழிப்பு துறை Dsp மணிகண்டனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூர்த்தீஸ்வரி லஞ்சப்பணம் ரூபாய் 1 லட்சத்தை வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும் அவர் காரில் வைத்திருந்த ரூபாய் 5 லட்சமும் பிடிபட்டது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.