செங்கல்பட்டு மாவட்டம் வேதாச்சலம் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுப்பிரியர் ஒருவர் மதுபானம் வாங்க வந்த போது, அவரிடம் கடை ஊழியர்கள் கூடுதலாக 10 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த நபர் டாஸ்மாக் கடை வாசலில் நின்றபடி அங்கிருந்தவர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கு வந்த செங்கல்பட்டு நகர காவல் உதவி ஆய்வாளர் ராஜா, அந்த நபரை அங்கிருந்து செல்லுமாறு கூறியதோடு அவரை அடித்து விரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த வீடியோவை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட எஸ்.ஐ. ராஜா மீது காவல்துறை தரப்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ராஜாவை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் இருந்து ஆயுதப்படைக்கு மாற்றி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கவும் ராஜாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
This website uses cookies.