திண்டுக்கல் : 10 ஆண்டு காலத்தில் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 1000 கோடிகள் ஊழல் நடத்தப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட வீரகல்லில் தமிழகத்தில் முதன் முறையாக கூட்டுறவு துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்க்கை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறுகையில் சென்ற ஆட்சிக்காலத்தில் மாநில அரசு ஐந்து கல்லூரிகளை கூட திறக்கப்படவில்லை ஆனால் திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் 1435 ரூபாய் கல்விக் கட்டணத்தில் முப்பத்தி மூன்று கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தக் கல்லூரிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி கற்க சேர்ந்து வருகின்றனர் என்றும், சென்ற ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு சங்கங்களில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கிறது. அதற்கான விசாரணைகள் நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் கூட்டுறவு சங்க ஊழல்களில் ஈடுபட்டவர்களில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பேட்டி அளித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.