அரியலூர்: செய்வினைக்கு மாந்திரீகம் செய்வதாக ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
அரியலூரை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது என மொபைலுக்கு வந்த அழைப்பை நம்பி ரூ.12 லட்சத்தை இழந்து விட்டதாக அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் அரியலூர் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கு குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவள்ளுவர் மாவட்டம் செங்குன்றம் பகுதியை சேர்ந்த வல்லவராஜ்,, கிருஷ்ணன் என்கிற தர்மராஜ், சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த குமார் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சேலம் மாவட்டம் எருமபாளையம் பேருந்து நிலையத்தில் அங்கு வரும் பொதுமக்களிடம் கைரேகை பார்ப்பதாக கூறி கைரேகை பார்த்தவுடன் தங்களுக்கு தோஷம், செய்வினை உள்ளதாகவும் கூறி அவர்களிடம் மொபைல் நம்பரை வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில் மூன்று நபர்களும் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பரிகாரம் செய்யவில்லை என்றால் தங்கள் வீட்டில் அசம்பாவிதங்கள் நடைபெறும் எனவும் அச்சுறுத்தி வந்துள்ளனர்.
விஜயகுமாருக்கு பில்லி சூனியம் இருப்பதாக கூறி கொல்லிமலை சென்று பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் அதற்கான தொகையை தனது வங்கி கணக்கில் அனுப்புமாறும் கூறி வங்கியின் மூலமாகவும் நேரடியாகவும் இதுவரை 12 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்த சைபர் க்ரைம் காவல்துறையினர் மூவரிடம் இருந்தும் 6,30,000/- ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் நகையை பறிமுதல் செய்து. குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.