திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. இவை 1,2,3,4 என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்ட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மே மாதத்துடன் மாநகராட்சி ஆணையாளராக இருந்த ராமமூர்த்தி ஒய்வு பெற்றார். அதனை தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி துணை ஆணையரான மகேஸ்வரி தற்போது பொறுப்பு ஆணையராக உள்ளார்.
இதையும் படியுங்க: மதுரை சத்திரப்பட்டி காவல் நிலையம் சூறை.. நேரில் சென்ற ஆர்.பி.உதயகுமார் திடீர் கைது!
இந்நிலையில் இவர் மாநகராட்சி ஊழியர்களை காலை ஏழு மணிக்கே பணிக்கு வந்து விட வேண்டும் வரி வசூலை மேற்கொள்ள வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு இரண்டு கோடி அளவில் வரி வசூலை கட்டாயம் செய்து விட வேண்டும் என மாநகராட்சி ஊழியர்களை நிர்ப்பந்தபடுத்தி பணிக்கு வர சொல்வதாக கூறும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ஏற்கனவே பணியாளர்கள் பற்றாக்குறை மாநகராட்சியில் பணிச்சுமை நிலவி வரும் நிலையில், பில் கலெக்டர் பணியிடத்தை நிரப்பமால் இளநிலை உதவியாளர்கள் மூலம் இந்த வரிவசூல் பணி மேற்கொள்வதால் கூடுதல் பணிசுமை ஏற்படுகிறது.
அவ்வாறு வரி வசூலிக்க சென்றாலும் அரசியல் குறுக்கீடு காரணமாக வரி வசூல் செய்ய இயலவில்லை எனவும், காலை ஏழு மணிக்கே பணி வரும்படி நிர்ப்பந்திப்பதால், குடும்ப சூழலை சரி வர கவனிக்க முடியாததால், மேலும் ஆய்வுக்கூட்டத்தில் பணியிடை நீக்கம், பணியிட மாற்றம் மேற்கொள்ளப்படும் என கூறுகின்ற காரணத்தால் பெரும் மனச்சுமையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.