தமிழகம்

பண்ணை வீட்டில் ரூ.200 கோடி மாயம்… அரசியல் பிரமுகர் பரபரப்பு விளக்கம்!!

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நடைபெற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசுகையில் மதுரையில் நூறு மாநகராட்சி வார்டுகளில் மொத்தம் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் இருக்கிறது. வணிக கட்டடங்கள் குடியிருப்பு கட்டடங்கள் தியேட்டர் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் உள்ளன.

இதற்கு மாநகராட்சி ஏ பி சி என மூன்று கேட்டகிரியில் வரி விதிக்கிறது. ஆண்டுக்கு மாநகராட்சிக்கு அரசுத்துறை இல்லாமல் 275 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.

வணிக கட்டடங்களும் உண்டான வரியை விதிக்காமல் குடியிருப்பு வரியை விதிக்கிறார்கள். இது மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் முறையிட்டபோது , நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கூறியிருக்கிறார்.

150 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் அதிகம். எட்டு பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சி வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுக்கிறது.

உயர் அதிகாரிகளின் பாஸ்வேர்டு எப்படி திருடப்படும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆணையாளர், உதவி ஆணையாளர், பில் கலெக்டர், வருவாய் உதவி ஆணையாளர் அவர்களின் பாஸ்வேர்ட் திருடப்பட்டு இருக்கிறது.மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் பெண்களாக இருப்பதால் அவரது கணவர்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.

சாதாரண மக்கள் வீடு கட்ட முயற்சி செய்தால் அதிகாரிகள் கவுன்சிலர்களோடு இணைந்து மக்களை மிரட்டி, லஞ்சம் கேட்கிறார்கள்.

வரிவிதிப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவி செய்கிறார்கள்.

நாங்கள் பூனை எலியை கபூபதி போல கபூகிறோம், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி நானும் ரவுடிதான் என்று சொல்வது போல பெட்டிசன் கொடுக்கிறார்கள்.

200 கோடி உங்கள் பண்ணை வீட்டில் திருடு போய்விட்டதே என்ற கேள்விக்கு? என்னை வைத்து ஓட்டுவது அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள்.

மாநகராட்சி ஊழல்தான் முக்கியம் மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. இதை கொண்டு வருவதற்கு விளக்கம் கேட்கிறீர்களா? என செல்லூர் ராஜு பேசினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

10 பவுன் நகையை காருக்கு பின் சீட்டில் வைத்தது ஏன்? வீடியோவில் நிகித்தா கூறிய பதில் என்ன?

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகித்தா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

25 minutes ago

அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!

மீண்டும் இணையும் அஜித்-ஆதிக் கூட்டணி? “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக…

16 hours ago

உங்களுக்கும் மாட்டு கொட்டகைதான்… பாமகவை எச்சரிக்கும் வானதி சீனிவாசன்!!

பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் மாதிரி மகளிர் பாராளுமன்ற கருத்தரங்கம் சேலத்தில் இன்று நடைபெற்றது அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன்…

17 hours ago

வெற்றிமாறன் படத்தில் குட் நைட் மணிகண்டன்? சிம்பு படத்தை குறித்து வெளியான மாஸ் தகவல்!

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது.“வடசென்னை” படத்தில் இடம்பெற்ற சில…

17 hours ago

இந்த முறை ரஜினி சொல்லப்போகும் கதை? ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தயாராகும் கூலி படக்குழு!

காக்கா-கழுகு கதை “வாரிசு” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சரத்குமார், “விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று கூறியது ரஜினிகாந்த்…

18 hours ago

மிருகத்தனமான தாக்குதல்… கொலை செய்பவர் கூட இப்படி செய்ய மாட்டார் : அஜித் மரணம் குறித்து நீதிபதிகள் வேதனை!

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி மரண விவகாரம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ். எம்.…

18 hours ago

This website uses cookies.