கோவை: பொள்ளாச்சியில் ஹோட்டல் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள மன்னுரை சேர்ந்த விவசாயி ஈஸ்வர சாமி. இவர் பொள்ளாச்சியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் விவசாயக் கடன் வாங்கியுள்ளார்.
இன்று தனது உறவினருடன் காரில் பஞ்சாப் நேஷனல் வங்கி சென்று கடன் தொகையை செலுத்திவிட்டு மீண்டும் பணம் பெற்றுக் கொண்டு பொள்ளாச்சி கோவை ரோட்டில் இல்ல அமுதசுரபி ஹோட்டலில் உணவருந்த செல்லும் முன் காரை பார்க்கிங் செய்துள்ளனர்.
இருவரும் அமுதசுரபி சென்று உணவு அருந்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும்போது காரின் கண்ணாடி மர்மநபர்களால் உடைக்கப்பட்டு காரில் இருந்த மூன்று லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதையடுத்து ஈஸ்வர சுவாமி மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் செல்வி தமிழ்மணி உத்தரவின் படி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.