கோவை : மாஸ்க் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களைத் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தபட்டது.
மேலும் சுகாதரத்துறைக்கு, நாளொன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களின் நிர்வாகத்தினர் அவ்விடங்களில் உள் நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினி வைக்கவும் மற்றும் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளித்தல் பணியினை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு, பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூபாய் 500/- அபராதமாக வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று கண்டறியபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றிய பட்டியலை சேகரித்து அவர்களை தனிமைபடுத்தும் பணியினையும் தீவிரபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய, வெளிநாடுகளில் இருந்து எவரேனும் நோய்தொற்றுடன் வந்தால், அவர்கள் மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.