புதுச்சேரி : புதுச்சேரியில் இருசக்கர வாகன பெட்டியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி பணித்திட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யனாரப்பன். இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (35), புதுச்சேரி பணித்திட்டு பகுதியில் தனது குழந்தைகள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி குடும்ப செலவிர்காக தனது நகையை கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு அடமான கடையில் அடகு வைத்துள்ளார்.
இதனை மீட்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் கடலூர் புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று 1 லட்சம் ரூபாய் பணம் எடுத்து கொண்டு அதனை வண்டியின் பெட்டியில் வைத்து கொண்டு அடகு வைத்த கடைக்கு சென்று,
தனது வாகனத்திலிருந்து 50 ஆயிரம் மட்டும் எடுத்து கொண்டு அடகு கடைக்கு சென்று தனது நகைகளை மீட்டு விட்டு வந்து பார்த்த போது அவரது வாகனத்தின் பெட்டி திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பெருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது முதலில் இரண்டு வாலிபர்கள் தமிழரசியை பின் தொடர்ந்து வருவதும் அவர் கடைக்குள் சென்ற பிறகு ஒருவர் ஹெல்மட் மாட்டி கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து தமிழரிசியின் வாகனத்தின் பக்கத்தில் நிற்பதும்,
அடுத்து மூன்று வாலிபர்கள் அடகு கடையின் வாசலில் தமிழரசிக்கு வெளியில் நடப்பது தெரியாமல் இருக்கும் படி மறைத்து நின்ரவாறு இருக்கும் போது, முதலில் வந்த இருவர் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து பணத்தை எடுத்து செல்வதும் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.