இரிடியம் தருவதாகக் கூறி 2 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நான்கு பேரை கோவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர்: கேரள மாநிலம், பாலக்காட்டையைச் சேர்ந்தவர் முகமது என்பவரின் மகன் அப்துல்லா அஜிஸ் (55). இவருக்குச் சொந்தமான நிலம் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ளது. தொழிலதிபரான இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களைச் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலர் அப்துல் அஜீசை சந்தித்துள்ளனர்.
அப்போது, தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தங்களுக்கு தெரிந்த நபர்கள் அதிக அளவில் உள்ளனர் என்றும், உங்களது இடங்கள் எதையாவது விற்க வேண்டும் என்றால் தங்கள் மூலம் விற்றுத் தருவதாகவும் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அப்துல் அஜீஸ் அவர்களுடன் தொடர்ந்து பேசி வந்துள்ளார். பின்னர் கோவைக்கு வந்த அவர், அபூபக்கர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தும் பேசி உள்ளார்.
அந்த நேரத்தில், அவர்கள் ஒரு சிறிய பாத்திரத்தில் இரிடியும் போன்ற ஒரு பொருளைக் காண்பித்து உள்ளனர். இது 100 சதவீதம் சக்தி வாய்ந்தது என்றும், இதனுடைய விலை இரண்டு கோடி ரூபாய் என்றும் கூறி இருக்கின்றனர். இதனை வாங்கி உடனே விற்றால், 10 கோடி ரூபாய் நமக்கு லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தைகளைக் கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து, அப்துல் அஜீஸ் இரண்டு கோடி ரூபாயை அபூபக்கர், ஜான் பீட்டர் உள்ளிட்ட சிலரிடம் கொடுத்து உள்ளார்.
இதையும் படிங்க : ஒரே நாளில் அதிரடி ரெய்டு.. சிக்கிய 329 கிலோ ‘பொருள்’
ஆனால், அதன் பிறகு அவர்கள் அந்த பொருளையும் கொடுக்காமல், கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்துள்ளனர். இதனையடுத்து, அப்துல் அஜீஸ் கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் அபூபக்கர், ஜான் பீட்டர், செந்தில்ராஜ், ஜனகன், ஜோதிராஜ், அனில் குமார் உட்பட அவர்களது கூட்டாளிகள் என 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்துள்ளனர். மேலும், மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.