கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே இளம்பெண்ணின் புகைப்படத்தை முகநூல் பக்கத்தில் பதிவேற்றி இறந்து விட்டதாக வதந்தி பரப்பிய இளைஞரை புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் அருகே உள்ள இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆன்றோ ஜோவின். இவரது மனைவி தன்ஷா.
இவருக்கும் பெரியவிளை மீனவ கிராமத்தை சேர்ந்த உறவினர்களுக்கும் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன்ஷாவின் உறவுக்கார இளைஞர் பெரியவிளை பகுதியை சேர்ந்த நாதன் ஜோசப் என்ற இளைஞர் கடந்த மாதம் 26-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் தன்ஷா வின் புகைப்படத்துடன் அவர் இறந்து விட்டதாக பொருள்படும் விதமாக ஆர்.ஐ.பி (RIP) என்று ஆங்கிலத்தில் வாசகத்தை பதிவேற்றி நண்பர்களிடமும் அதை பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
இது முகநூல் பக்கங்களில் வேகமாக பகிரப்பட்ட நிலையில் தன்ஷாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் அவர்கள் விசாரிக்கையில் அது வதந்தி என தெரியவந்த நிலையில்
தகவல் அறிந்த தன்ஷா அந்த இளைஞரிடம் தொடர்பு கொண்டு பதிவை நீக்க கேட்டுள்ளார். ஆனால் அவர் பதிவை நீக்க முடியாது என கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது
இது குறித்து தன்ஷா ஆதாரங்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் இளம்பெண் இறந்து விட்டதாக முகலூலில் வதந்தி செய்தியை பரப்பி தலைமறைவாக இருக்கும் இளைஞர் நாதன் ஜோசப்பை வலைவீசி தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.