சூதாட்ட விடுதி நடத்தி லட்சம் லட்சமாக வருமானம்.. கசிந்த ரகசியம் : திமுக கவுன்சிலர், மனைவி உட்பட 3 பேர் கைது!
கோவை மாநகராட்சி 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சரண்யா இவரது கணவர் செந்தில்குமார் அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோர் கணபதி ராஜவீதி,பஜனை கோவில் தெருவில் சூதாட்ட விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.
ரகசிய தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.அப்போது அங்கு 25 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
தொடர்ந்து அங்கிருந்து சுமார் 12லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 25 நபர்களை போலீசார் கைது செய்தனர்.20 பேர் காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூதாட்டத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி கவுன்சிலரின் கணவரே சூதாட்ட விடுதியை நடத்தியதும் அங்கு போலீசார் லட்சக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.