பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த ‘கேஜிஎப் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த சாதனை படைத்தது.
தொடர்ந்து, 2 வாரங்களில் உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை மேல் சாதனைப் படைத்து வருகிறது. இதனிடையே அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த வாரம் ‘ரன்வே 34’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தால் ‘கேஜிஎப் 2’ படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறையும் எனவும் இப்படத்தின் வசூல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘ரன்வே 34’ படத்தின் வரவேற்பு சுமாராக இருந்ததால் அது ‘கேஜிஎப் 2’ படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ‘கேஜிஎப் 2’ படத்தைப் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி உள்ளார்கள்.
இதனால் ‘ரன்வே 34’ படத்தின் வசூல் 40 சதவீதம் குறைந்துள்ளது. 6 நாளில் வெறும் ரூ.21 கோடி வசூல் மட்டுமே பெற்றுள்ளது. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வசூல் வேட்டையை பார்த்து இந்தி திரையலகமே மிரண்டு போய் உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.