திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடந்த ஆட்டுச் சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது.
இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இஸ்லாமியர்கள் பக்ரீத் நாளில் குர்பானி கொடுப்பதற்காக அதிக அளவில் ஆடுகளை வாங்குவது வழக்கம். இதையொட்டி இன்று அய்யலூரில் கூடிய ஆட்டுச் சந்தை களை கட்டியது.
அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும் சேவல்களையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். வெள்ளாடுகளை காட்டிலும் செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது.
நேற்று ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூபாய் 300 முதல் 350 வரையிலும், சண்டைக்கு பயன்படும் கட்டு சேவல்கள் 2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலும், நல்ல திடகாத்திரமான கிடா ஆடுகள் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் ரூபாய் 6000 முதல் 7000 வரையிலும் விற்பனை செய்யப்பட்டன.
இது குறித்து வியாபாரிகள் கூறியபோது இன்று ஆட்டுச் சந்தையில் விற்பனை நல்ல முறையில் இருந்தது. சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக தெரிவித்தனர்.
ஆடுகள் விற்பனைக்கு வந்த விவசாயிகள் கூறியபோது பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சந்தையில் தங்கள் கால்நடைகளுக்கு நல்ல விலை கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
This website uses cookies.