ஆத்தூர் அருகே கெங்கவல்லியில் உரிய அனுமதியின்றி அரசு ஆவின் பால் நிலையத்தை திமுக பிரமுகர் தனியாருக்கு வாடைக்கு விட்டதால் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி அலுவலகம் அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு ஆவில் பால் நிலையத்தை மாற்றுத்திறனாளி சுரேஷ் என்பவர் நடத்தி வந்துள்ளார். இதனிடையே, ஆவின் பால் நிலையத்தில் உரிய வருமானம் இல்லாததால், பால் நிலையத்தை திரும்ப அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடந்த ஆவின் பால் நிலையத்தை அரசு அனுமதியின்றி தன்னிச்சையாக திமுக நகர செயலாளர் பாலமுருகன் என்பவர், கடைக்கு அட்வான்ஸ் தொகையை பெற்று கொண்டு தனியாருக்கு மாத 5 ஆயிரம் ரூபாய் வீதம் வாடகைக்கு விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, ஆவின் பால் நிலையத்தை வாடகைக்கு எடுத்த தனி நபர், ஆவின் பெயர் பலகைகளை மறைத்து விட்டு மைசூர் பில்டர் காபி என்ற பெயரில் கடை நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆவின் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட ஆவின் வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கெங்கவல்லி திமுக, நகர செயலாளர் பாலமுருகன் என்பவர் திருமுருகனிடம் அட்வான்ஸ் தொகையை பெற்றுக் கொண்டு, ஆவின் பால் நிலையத்தை மாதம் 5 ஆயிரம் ரூபாய் வீதம் வாடகைக்கு விட்டுள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து, ஆவின் அதிகாரிகள் பேரூராட்சி அதிகாரிகள் முன்னிலையில் கடையை பூட்டி சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.