சாலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்பந்ததாரரிடம் ரூ.3.50 லட்சம் லஞ்சம் வாங்கிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் – தலைவாசல் வீரகனூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் என்பவர், தெடாவூர் – தம்மம்பட்டி சாலையை விரிவாக்கம் செய்ய டெண்டர் மனு அளித்திருந்தார். அதன்படி, இவருக்கு டெண்டரும் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்குவதற்காக, ஆத்தூர் உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் பணி ஒப்பந்தச் சான்று வழங்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ரூ.3.50 லட்சம் கமிஷன் தொகையும், பணி முடிந்த பிறகு, 12 சதவிதம் கமிஷனாக, அதாவது ரூ.78.53 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.
இதனால், அதிர்ந்து போன ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜ், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின்படி, நேற்று நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரிடம், அவரது அலுவலகத்தில் வைத்து ரூ.3.50 லட்சம் பணத்தை சுந்தர்ராஜ் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், பொறியாளர் சந்திரசேகரை கையில் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.