தமிழகம்

ஜிம்மில் அதிக வொர்க் அவுட்.. உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்!

சேலத்தில் அதிக உடற்பயிற்சி செய்ததால் ஜிம் உரிமையாளர் உயிரிழந்த செய்தி உடற்பயிற்சி மேற்கொள்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்: சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாதிர் மகமுத். 35 வயதாகும் இவர், 31வது வார்டு திமுக முன்னாள் செயலாளர் ஆவார். இவர் சேலம் குகை ஆற்றோர வடக்குத் தெருவில், சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் (Gym) நடத்தி வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், அவருடைய மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளார். மேலும், இவரும் தனது ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்து உள்ளார்.

அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சேட்டு என்ற மகாதிர் மகமுத், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு உள்ளார். பின்னர், இரவு 8 மணி அளவில் ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சென்றுவிட்டனர். ஆனால், சேட்டு மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்து உள்ளார். பின்னர் அங்கு உள்ள குளியல் அறைக்குச் சென்று குளிக்க ஆரம்பித்துள்ளார் சேட்டு.

ஆனால், அவர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் அவருக்காக காத்திருந்த அவரது ஓட்டுநர், ஜிம்முக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் இல்லாததால், குளியல் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தண்ணீர் சத்தம் கேட்டதால், குளித்துவிட்டு வருவார் என காத்திருந்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் சத்தம் ஏதும் கேட்காததால் கத்தி கூப்பிட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, சேட்டுக்கு என்னவாயிற்று என பார்த்தனர்.

பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது, அவரது மூக்கு மற்றும் காதில் இருந்து ரத்தம் வழிந்து உள்ளது. இதனை அடுத்து, அவரை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவில் கருவறையில் மது அருந்திய பூசாரி… போட்டோவுக்கு போஸ்.. ஷாக் வீடியோ!

பின்னர், இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ” அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர், பின்னர் நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் அவர் இறந்திருக்கலாம்” எனக் கூறி உள்ளனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.