சேலம் அருகே திருமணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்து மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் – வாழப்பாடி அருகே உள்ள மாரியம்மன் புதூர் பிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் அருள்முருகன் (27) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அபிராமி (19) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மகிழ்வோடு தொடங்கிய இவர்களின் இல்லற வாழ்க்கையில், நேற்று அசம்பாவிதம் நடந்தது. புத்தாண்டு தினமாக நேற்று இரவு கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அபிராமி நள்ளிரவு 12 மணியளவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார்.
இதைக் கண்டு பதறிப் போன கணவர் அருள் முருகன், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக, அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்தற்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
This website uses cookies.