சேலம் அருகே திருமணமாகி 3 மாதத்தில் கிணற்றில் குதித்து மனைவியும், கணவனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் – வாழப்பாடி அருகே உள்ள மாரியம்மன் புதூர் பிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் அருள்முருகன் (27) கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அபிராமி (19) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
மகிழ்வோடு தொடங்கிய இவர்களின் இல்லற வாழ்க்கையில், நேற்று அசம்பாவிதம் நடந்தது. புத்தாண்டு தினமாக நேற்று இரவு கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன அபிராமி நள்ளிரவு 12 மணியளவில் அருகே உள்ள விவசாய கிணற்றில் தற்கொலை செய்வதற்காக குதித்துள்ளார்.
இதைக் கண்டு பதறிப் போன கணவர் அருள் முருகன், தனது மனைவியை காப்பாற்றுவதற்காக, அவரும் கிணற்றில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடத்தற்கு சென்ற போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.