சேலத்தில் எருதாட்டத்தின் போது குடிபோதையில் இருந்த சிறுவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சேலம் மாநகர் ரெட்டிபட்டி அருகே காணும் பொங்கலை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
அப்போது, சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சிறுவன், (குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் என கூறப்படுகிறது) அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவரை பார்த்த அழகாபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார், ஏதோ கொலை குற்றவாளி பிடிப்பது போல் சுற்றி வளைத்து பிடித்து அவரை சரமாரியாக தாக்கினார்கள்.
வலியால் துடித்த அச்சிறுவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, அவரை விரட்டிச் சென்று பிடித்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கி அழைத்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் அச்சிறுவன், “என்னை என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள், வயிற்றில் மட்டும் அடிக்காதீர்கள்,” என கெஞ்ச தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சிறுவனின் பேச்சை கண்டு கொள்ளாத போலீசார் ஏதோ மாட்டை அடிப்பது போல் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.