சேலத்தில் எருதாட்டத்தின் போது குடிபோதையில் இருந்த சிறுவனை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சேலம் மாநகர் ரெட்டிபட்டி அருகே காணும் பொங்கலை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் எருதாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அப்பகுதியில் கூடியிருந்தனர்.
அப்போது, சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்த சிறுவன், (குற்ற வழக்கில் தொடர்புடைய நபர் என கூறப்படுகிறது) அங்கு மது போதையில் நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவரை பார்த்த அழகாபுரம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார், ஏதோ கொலை குற்றவாளி பிடிப்பது போல் சுற்றி வளைத்து பிடித்து அவரை சரமாரியாக தாக்கினார்கள்.
வலியால் துடித்த அச்சிறுவன் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றபோது, அவரை விரட்டிச் சென்று பிடித்து பொதுமக்கள் முன்னிலையிலேயே சரமாரியாக தாக்கி அழைத்துச் சென்றனர். ஒரு கட்டத்தில் அச்சிறுவன், “என்னை என்ன வேணாலும் செய்து கொள்ளுங்கள், வயிற்றில் மட்டும் அடிக்காதீர்கள்,” என கெஞ்ச தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சிறுவனின் பேச்சை கண்டு கொள்ளாத போலீசார் ஏதோ மாட்டை அடிப்பது போல் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.