சேலம் அருகே இளம்பெண்ணை கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகர் லீபஜார் பகுதியில் மைதிலி என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் திடீரென அந்த பெண்ணின் இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளார். இதில் அதிர்ஷ்டவசமாக தப்பிய அந்த பெண், வண்டியை அப்படியே போட்டுவிட்டு மீண்டும் கடைக்குள் செல்ல முற்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தங்கராஜ் மீண்டும் அந்த பெண்ணை தாக்க முற்பட்டுள்ளார். அந்த பெண் கடை முன்னே வைக்கப்பட்டிருந்த பொருட்களை தூக்கி அந்த நபர் மீது வீசி உள்ளார். பின்னர், தங்கராஜ் அங்கிருந்து தப்பி ஓடவே பள்ளப்பட்டி போலீசார் நேற்று இரவு அவரை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அனைத்து சென்று விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மைதிலி தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.