இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 4 வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது.முதலில் டாஸ் வின் பண்ணி பேட்டிங்கை தேர்வு செய்தார் பேட் கம்மின்ஸ்.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களான உஷ்மான் கவாஜா மற்றும் தன்னுடைய முதல் சர்வேதச போட்டியில் அடியெடுத்து வைக்கும் 19-வயதே ஆன சாம் கோன்ஸ்டஸ் இறங்கினார்கள்.
ஆட்டம் ஆரம்பம் முதலே தன்னுடைய அதிரடி பேட்டிங்கால்,இந்திய பவுலர்களை திணறிடித்தார் சுட்டி பையன் சாம் கோன்ஸ்டஸ்,அதிலும் பும்ரா வீசிய ஓவரில் கீப்பர் தலைக்கு மேல் சிக்ஸர் அடித்து அசத்தினார்.
கிட்டத்தட்ட 3 வருடங்கள் பிறகு டெஸ்ட் போட்டியில் பும்ரா பவுலிங்கில் சிக்ஸர் அடிக்கப்பட்டுள்ளது.இதனால் மைதானத்தில் இருந்த சக வீரர்கள் கொஞ்சம் ஆக்ரோஷமாக இருந்தனர்,இந்த சூழலில் 10வது ஓவர் முடிந்த நிலையில்,எதிர்முனைக்கு சாம் கோன்ஸ்டஸ் சென்ற போது விராட்கோலி தன்னுடைய தோள்பட்டையை வைத்து அவரை இடித்து சில வார்த்தைகளை விட்டார்.
இந்த நிகழ்வை கண்டித்து பல கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.இந்த நிலையில் அதிரடியாக ஆடி வந்த இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ்,ஜடேஜா பந்து வீச்சில் 60 ரன்னுக்கு ஆட்டம் இழந்தார்.அதன்படி முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்களை இழந்து 311 ரன்கள் குவித்தது.
இதையும் படியுங்க: AUS VS IND:இளம் வீரரை சீண்டிய கோலி…மைதானத்தில் ஏற்பட்ட பரபரப்பு..வைரலாகும் வீடியோ.!
அதன்பின்பு,செய்தியார்களை சந்தித்த சாம் கான்ஸ்டாஸ் இரண்டாவது இன்னிங்சிலும் பும்ராவின் பந்துகளை அடித்து நொறுக்குவேன் என்று சவால் விட்டுள்ளார்.மேலும் என்னுடைய குறிக்கோள் பும்ராவின் திட்டங்களை தகர்த்து எறிவதுதான்,என் அணி கேப்டன் என்னை பயமின்றி விளையாட சொன்னார்.அதன்படி பும்ராவின் பந்துகளை நான் சிதறடித்தேன்.
அவர் உலகத்தரம் வாய்த்த பௌலர் தான் இருந்தாலும்,என்னுடைய பேட்டிங்கால் அவர் மீது அழுத்தத்தை போட முயற்சிப்பேன் என்று கூறியுள்ளார்.இதனால் இந்த 4வது டெஸ்ட் மேட்ச்,பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என தெரிகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.