அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் திமுக முக்கிய பிரமுகர்களின் பெயரில் மண் திருட்டு அரங்கேறி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், நெரூர் என்.புதுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு நிலத்தில் சுமார் 3 மாத காலமாக சவுடுமண் திருட்டு அரங்கேறி வருகின்றது.
நாள் ஒன்றுக்கு 150 முதல் 200 லாரிகள் வரை நடைபெறும் மண் திருட்டு நடைபெற்று வருகின்றது. இந்த மண் திருட்டு குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் மட்டுமில்லாது, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடத்தும் புகார் தெரிவித்தும், எந்தவித பயனுமில்லை.
எனவே, இந்த சம்பவம் குறித்தும் இந்த மண் கடத்தல் குறித்தும், மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திமுக பிரமுகர்களின் பெயரில் நடைபெறும் இந்த மண் திருட்டு சம்பவத்தினை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கனிம வளக்கொள்ளையை கட்டுப்படுத்த முடியும் என்றும், ஆகவே துரித நடவடிக்கை எடுத்து கனிமவளத்தினை காக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.