பழனி அருகே ஆயக்குடி பகுதியில் அனுமதி இன்றி மண்ணள்ளியபோது தடுத்து நிறுத்திய விஏஓ மற்றும் உதவியாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற புகாரில் திமுக கவுன்சிலர், திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னிமலை சித்தன் கரடு பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி அள்ளி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, அவருடைய உதவியாளர் மகுடீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, அவர்கள் வேறு ஒரு இடத்திற்கான நடைசீட்டை பயன்படுத்தி மண் அள்ளப்பட்டது தெரியவந்ததை அடுத்து, லாரிகளை காவல் நிலையத்திற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளனர். லாரியை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கி லாரிகள் முன்னால் செல்ல, பின்னால் விஏஓ மற்றும் அவரது உதவியாளர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பொலிரோ ஜீப்பில் வந்த நான்கு பேர் விஏஓ மீது வாகனத்தை ஏற்றுவது போலவும், வலது புறமும் இடது புறமும் சினிமா காட்சிகள் போல் வாகனத்தை செலுத்தியதால் வாகனத்திற்கு வழி விடாமல் சென்றுள்ளனர். இதில் நிலை தடுமாறிய விஏஓ அச்சத்தில் ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீதும், மண் அள்ளிய குண்டர்கள் லாரிகளை மோதுவது போல் சென்றுள்ளனர்.
மேலும், லாரிகளில் இருந்த மண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த விஏஓ மற்றும் உதவியாளர் மகுடீஸ்வரன் மீதும் கொட்டியவாறே சென்றுள்ளனர். இதனால் காவல் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தப்பி ஓடிய நான்கு பேரையும் மீதும் போலீசார் தேடி வந்தனர்.
மேலும், விஏஓ சங்கத்தினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, விஏஓவை லாரி ஏற்ற முயன்றவர்களை 4 நாட்களாக போலீசார் தேடி வந்ததில், பாலசமுத்திரம் திமுக கவுன்சிலர் ரமேஷ், அவரது தந்தை சக்திவேல், திமுக கவுன்சிலரின் கணவர் பாஸ்கரன் மற்றும் காளிமுத்து உள்ளிட்டவர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.