விழுப்புரம் : கடத்தி வந்த 10 கிலோ சந்தன கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள தொரவி மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் நிறுத்த கூறிய போது வாகனத்திலிருந்து ஒருவர் இறங்கி தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சென்னகிருஷ்ணாவை போலீசார் பிடித்து விசாரனை செய்தனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள ஆயோத்தியாபட்டினம் கிராமத்தை சார்ந்த மலைவாழ் சமூகத்தை சார்ந்த சென்ன கிருஷ்ணா 10 கிலோ எடை கொண்ட சந்தன கட்டை துண்டுகளை சாக்கு பையில் மூட்டையாக கட்டி புதுச்சேரிக்கு எடுத்து செல்வதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தன கட்டை துண்டுகளை கடத்திய சென்ன கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து விழுப்புரன் வனத்துறை சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
சந்தன கட்டை கடத்தல் தொடர்பாக மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் விசாரனை மேற்கொண்டு சென்ன கிருஷ்ணா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் தப்பியோடிய முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். சந்தன கட்டை கடத்தலில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் குற்றவாளியிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.