காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் ஊழியர் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணி செய்ததற்கு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளர்.
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யம்பேட்டை ஊராட்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்களும் நூற்றுக்கணக்கான பட்டு கைத்தறி நெசவு ஆலைகளும் உள்ளது. மக்கள் தொகை அதிகம் உள்ள காரணத்தினாலும், பட்டுக்கு சேலை நெய்வதற்க்கு முன்னர் பட்டு நூல்களில் சாயம் பூசுவதாலும், அந்த தண்ணீர் எல்லாம் வேகவதி ஆற்றில் சென்று கலக்கின்றது.
அதனால், அவ்வப்போது கால்வாய்களில் கழிவு நீர் வெளியேறி டிரைனேஜ் பிரச்சனைகள் ஏற்படும். கடந்த வருடம் டிரைனேஜ் சுத்தம் செய்யும் போது சம்பவ இடத்திலேயே மூன்று பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கழிவுநீர் வெளியேறி வருவதால் ஆட்கள் மூலம் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை செய்யும் துப்புரவு ஊழியர்கள் பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்கின்றனர்.
ஊராட்சியில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்வதற்கு போதிய இயந்திரம் எதுவும் இல்லாததால் ஆட்களை கொண்டே சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு உள்ள நிலையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் அய்யம்பேட்டை ஊராட்சி நிர்வாகம் அளிக்காதது மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.