கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் 66 – வது வார்டில் குப்பை லாரியில் பணியாற்றி வரும் அருண்குமார் என்பவர் வழக்கம் போல் இன்று காலையில் கோவை, புலியகுளம் கிட்னி செண்டர் அருகே, மாநகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பை லாரியில் பணிகள் மேற்கொண்டு வந்து உள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவருக்கு அகிக அளவில் வியர்வை வெளியேறியும்,
முகம், கை, கால்கள் வீங்கிய நிலையில் மயக்கம் வருவதாக தெரிவித்து உள்ளார். இதை அடுத்து உடன் பணியாற்றி வருபவர்கள் விஷ பூச்சி கடித்ததால் இப்படி நடந்து இருக்கும் என்று கருதி உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து வரவழைத்து அருண்குமாரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர்.
தற்பொழுது அருண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தூய்மை பணியாளர்களின் உயிரோடு விளையாடாமல், பணியின் போது அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கி உயிரைப் பாதுகாக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.