சேலம் – சங்ககிரி காவல் நிலையத்தில் திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்ததோடு, புகார் கொடுக்க வந்த பவானியைச் சேர்ந்த பரத் என்பவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் சங்ககிரி சரக காவல்நிலையத்தில் நாளை சங்ககிரி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அவர்களின் ஆய்வு நடப்பதையொட்டி, காவல்நிலையம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு காவல் நிலையம் வலது பக்கத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் எரிந்து கொண்டிருந்தபோது, திடீரென மர்மப் பொருள் வெடித்ததில் காவல்நிலையம் மேற்கூரை தகரம் கிழிந்தது விழுந்தது.
அப்போது, காவல் நிலையம் அருகில் சுத்தம் செய்து கொண்டிருந்த சங்ககிரியைச் சேர்ந்த நியமத்துல்லா என்பவரின் வயிற்றில் காவல் நிலையத்தின் மேற்கூரை தகரம் கிழித்ததில் பலத்த காயம் அடைந்து சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், காவல் நிலையத்தில் சாலை விபத்து வழக்கு சம்பந்தமாக வந்த பவனியைச் சேர்ந்த பரத் என்பவருக்கு வலது பக்க தொடையில் காயம் ஏற்பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் தொடர்பாக சங்ககிரி காவல் ஆய்வாளர் தேவி சங்ககிரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தகவலறிந்து விரைந்து வந்த சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.