தமிழகம்

நானும் அப்போ உச்ச நடிகர் தான்.. வம்பிழுத்து பார்க்கும் சரத்குமார்!

நான் அரசியலுக்கு வந்தபோது நானும் உச்ச நடிகராக தான் இருந்தேன் என நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில் இன்று (நவ.15) நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “1996ஆம் ஆண்டு தமிழகத்தில், இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்து, தனிமனிதனாக நான் அரசியலுக்கு வந்தேன். அன்றைக்கு என்னைப் போன்று யாருக்கும் அந்த தைரியமும், திராணியும் கிடையாது.

அந்த நேரத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறுவது போல நானும் உச்ச நடிகர்தான். மிகப்பெரிய ரசிகர்கள் எனக்கு இருந்தனர். அதிகமான ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஒரு படத்தைப் பார்ப்பது என்றால், அது என்னுடைய படத்தை மட்டும்தான். அந்த நேரத்தில் தான் நானும் அரசியலுக்கு வந்தேன்.

அதிகமான ரசிகர்கள் இருந்த நேரத்திலும், பெரிய பெரிய வெற்றிப் படங்களைக் கொடுத்த போதிலும் நான் அரசியலுக்கு வந்தேன். அதற்கு காரணம் மக்கள் சேவை மட்டுமே. ஜெயலலிதாவை யாரும் எதிர்க்கவே முடியாது என்று அப்போது கூறினார்கள், என் வீட்டில் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள், மலத்தைக் கழித்து ஊற்றினார்கள், ஆனாலும், நான் 40 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தேன்.

அதேபோல், நான் தனியாக அரசியல் கட்சி தொடங்கிய போது, இரு மாபெரும் தலைவர்களை எதிர்த்து அரசியல் செய்தோம் (அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி). எனவே, என்னைப் பொருத்தவரையில், எதுவும் சாத்தியம், உழைப்பும் உறுதியும் இருந்தால் மட்டும். உலக அளவில் இந்தியாவுக்கு இன்றைக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி.

சர்வதேச அவில் இந்தியர்களின் பெருமை உயர்ந்துவிட்டது. முந்தைய ஆட்சிக்கும், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகும், தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பாதிப்புகள் குறைந்துகொண்டே தான் வருகிறது. இலங்கை அரசுக்கு மிகப்பெரிய உதவியாக இருந்ததால் தான் பொருளாதார ரீதியாக அந்த நாடு வலுவான நிலையில் இருக்கிறது,” எனக் கூறினார்.

இதையும் படிங்க: காதலிப்பவர்கள் கட்டிப்பிடிப்பது குற்றமல்ல.. கோர்ட் அதிரடி கருத்து!

முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பேசிய அதன் தலைவரும், நடிகருமான விஜய், என்னுடைய கேரியரில் உச்சத்தில் உள்ளபோது அரசியலுக்கு வந்துள்ளேன் எனக் கூறியிருந்தார். மேலும், சரத்குமார், இந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, பாஜகவோடு இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

6 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

6 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

6 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

7 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

8 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

8 hours ago

This website uses cookies.