கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நிர்வாகப் பிரிவில் ஐ.ஜி யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வரும் சரவண சுந்தர் ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படியுங்க: கோவையில் கவனத்தை ஈர்த்த அதிமுக போஸ்டர்… யார் அந்த SIR?
அதுபோன்று கோவை மாநகர வடக்கு துணை ஆணையராக பணியாற்றி வரும் ஸ்டாலின் மாற்றப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு பதிலாக சென்னை லஞ்ச ஒழிப்பு துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தேவநாதன் கோவை மாநகர வடக்கு துணை ஆணையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கோவை மாநகரத்திற்கு துணை ஆணையர் சரவணகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்னை தெற்கு மண்டலம் பொருளாதார குற்றப்பிரிவில் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது தவிர தமிழகத்தில் மொத்தம் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டு உள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.