Categories: தமிழகம்

மண் வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு: 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் சத்குரு..!!

கோவை: மண் வளத்தை பாதுகாக்க சர்வதேச அளவிலான அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈஷா நிறுவனர் சத்குரு 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளார்.

இதற்காக அவர் கோவை வாலாங்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் லண்டன் செல்வதற்காக விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார். அப்போது சத்குரு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது,மண்ணை காப்பாற்ற உலக முழுவதும் சேர்ந்து மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. உலக விஞ்ஞானிகள் தோரயாமாக 60 முதல் 80 பயிர்கள் மட்டும் இருக்கும் என்கின்றனர்

வரும் 2045ம் ஆண்டு உணவு தயாரிக்கும் சக்தி 40 சதவீதமாக குறையும் என்கின்றனர் மக்கள் தொகை 9 பில்லியனுக்கு மேல் வரும் போது, மக்கள் தொகைக்கான உணவு உற்பத்தி குறைந்து இருக்கும். இப்போது இதை மீட்டுடெடுக்க வாய்ப்பு இருக்கின்றது.சில
பாலிசி மாற்றம் மூலம் மண்வளம் பாதுகாக்க முடியும்

உலகம் முழுவதும் 730 அரசியல் கட்சியினருக்கு கடிதம் எழுதி இருக்கின்றேன்.மண், மண்ணில் உள்ள உயிர்கள் குறித்து தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒன்றை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறேன். 3 தன்னார்வ அமைப்புகள் ஈஷாவுடன் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்கின்றோம். இசை, சினிமா, விளையாட்டு என அனைத்துதுறை வல்லுனர்களும் நம்முடன் இருக்கின்றனர்.

வரும் 21ம் தேதி மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த 100 நாட்களில் 27 நாடுகளுக்கு 30 ஆயிரம் கி.மீ தூரம் மோட்டார் சைக்கிளில் பயணிக்க இருக்கின்றேன். இந்த நேரத்தில் பல சவால்களை கடக்க வேண்டும். பனி, வெயில் , மழை, போர் என அனைத்து சூழல்களையும் கடந்து இந்த பயணம் இருக்கும்

கடந்த 2 வருடத்தில் எங்கே போனாலும் எல்லாரும் மண் பாதிப்பு தெரிகின்றது. பூனைக்கு மணி கட்ட முட்டாள் தேவை என்பதற்காக நான் இதை செய்கின்றேன் உக்ரைனில் போர் காரணமாக சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு ஈஷா தன்னார்வலர்கள் மத்திய அரசுடன சேர்ந்து உதவி வருகின்றோம். தங்குமிடம், போக்குவரத்து போன்றவை ஏற்படுத்தப்படுகின்றது . தற்போது உக்ரைனில் ஏற்பட்டு இருப்பது கஷ்டமான நிலை. ரஷ்யாவுடன் பேசி வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார்கள்

உக்ரைனில் நிற பிரச்சினை இருக்கின்றது.தோலை பார்த்து ரயிலில் ஏற்றுவதில்லை. ரஷ்யா வழியாக கொண்டு வரும் முயற்சி நல்ல முயற்சி.தூரம் அதிகம் என்றாலும் பாதுகாப்பானது. இன்னும் 11 ஆயிரம் பேர் அங்கிருகின்றனர். நீர்நிலைகள் நன்றாக இருக்க மண்ணை காக்க வேண்டும்.84 சதவீதம் தண்ணீர் விவசாயத்திற்கு போகின்றது

மண்ணில் இருக்கும் உயிர்சத்து .68 ஆக இருக்கின்றது. இதை 8 முதல் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். உயிர்சக்தி வந்து விட்டால் 100 லிட்டர் நீரில் நடைபெறும் விவசாயம் 30 லிட்டரில் செய்ய முடியும்.மண் சத்தும் கொண்டு வர வேண்டும். உள்ளாட்சி தேர்தல் அரசியல் தேர்தல் கிடையாது. தனி நபர்களின் மீது கொண்டுள்ள நம்பிக்கயால் அந்த ஊரில் யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

4 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

5 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

6 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

6 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

7 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

7 hours ago

This website uses cookies.