கோவை : காரமடை அருகே மருதூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் மெஷினை உடைத்து முகமூடி அணிந்த நபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய காரமடை அடுத்த மருதூரில் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் ஆனது உள்ளது.
காரமடை வெள்ளியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஏடிஎம் மெஷின் உள்ள நிலையில் இன்று அதிகாலை ஒன்று முப்பது மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மெஷின் அறையில் நுழைந்து மெஷினை உடைக்க முயற்சித்துள்ளார்.
சுமார் ஐந்து நிமிடங்களாக அந்த மர்மநபர் ஏடிஎம் மிஷினில் சில பகுதிகளை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் பணத்தை எடுக்க முடியவில்லை.
இதனை அடுத்து சாலையில் சில வாகனங்கள் வருவதை கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை ஏடிஎம் மெஷின் உடைத்து இருப்பதைக் கண்டு அந்த பகுதி மக்கள் காரமடை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்
தகவலின்பேரில் காரமடை காவல் நிலைய ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் மர்ம நபரை முகமூடி அணிந்து ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சித்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது காரமடை போலீசார் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் பகுதியில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் மருதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
தொடர் மரணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த “காந்தாரா” திரைப்படம் இந்தியா முழுவதும் மிகப்…
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகின்றனர். இதையும்…
அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
This website uses cookies.