கோவை சாய்பாபா காலனி பகுதியில் மெரிட் இன்ஃப்ரா private லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் விஜயகுமார். இதே நிறுவனத்தின் சி.இ.ஓ ஜோயல் எமர்சன் ஆகியோர் இந்த நிறுவனத்தின் மூலம் கோவை பெரியநாயக்கன்பாளையம், அப்பநாயக்கன்பட்டி, பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடு மனை இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் அதில் வீடு கட்டி விற்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டனர்.
இதனை நம்பி கடந்த 2019 ஆம் ஆண்டில் வீட்டுமனை மற்றும் வீடு வாங்குவதற்காக பணத்தை பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அதில் வீட்டுமனையை கிரையம் செய்ய 10 சதவீத தொகை அட்வான்ஸ் முதலில் தர வேண்டும் எனவும் கிரயத்தின் போது மீதமுள்ள பணத்தை தர வேண்டும் என்ற நிபந்தையுடன் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.
இதில் 26 பேரிடம் கிட்டத்தட்ட 90 லட்சத்திற்கும் அதிகமான தொகையை பெற்று கொண்ட விஜயகுமார்,பணத்தை கொடுத்தவர்கள் நான்கு முறை பத்திரப்பதிவுக்கு சென்றபோது இடத்தின் உரிமையாளர் வரவில்லை, பங்குதாரர் வரவில்லை என காரணம் கூறி காலத்தை கடத்தி வந்துள்ளார்.
மேலும் பலரிடம் முழுதொகையையும் பெற்றுகொண்டு வீட்டை பாதிவரை கட்டி, மீதமுள்ள பணிகளை கிடப்பில் போட்டதாக பாதிக்கப்பட்டவர்கள், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விஜயகுமாரை இன்று அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். 26 பேரில் சிலருக்கு பணத்தை கொடுத்ததாக கூறப்படும் நிலையில் 16 பேரிடம் 78 லட்சம் ரூபாய் மோசடி செய்த்தாக, விஜயகுமார் மற்றும் ஜோயல் எமர்சன், திருச்சியை சேர்ந்த கிளமெண்ட் பெர்னா போஸ் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள கோவை மாநகர குற்றபிரிவு போலீசார் விஜயகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.