வேலூர் : அரக்கோணம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் பள்ளிப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகளை அவர்கள் வீட்டிலிருந்தே அழைத்து வர பேருந்து வசதி இந்த பள்ளியில் உள்ளது. இந்நிலையில், இன்று காலை சேந்தமங்கலம் பகுதியில் இருந்து சுமார் ஐந்து மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, சேந்தமங்கலம் ரயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது, பள்ளி பேருந்தில் இருந்து புகை வருவதை கண்ட, சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள், பேருந்து ஓட்டுநர் இடம் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்தில் இருந்த ஐந்து மாணவ, மாணவிகளை கீழே இறங்கச் செய்து விட்டார். இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதையடுத்து, வாகனம் தீப்பிடித்து எரியத் துவங்கியது. பின்னர், இச்சம்பவம் குறித்து அரக்கோணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், எரிந்து கொண்டிருந்த பேருந்தை அணைத்தனர். ஓட்டுநரின் துரித முயற்சி காரணமாக மாணவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.