குமரியில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அரசுப் பேருந்து நடத்துனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.
கன்னியாகுமரி: குமரி மாவட்டம், உண்ணாமலைக்கடை அருகே உள்ள பயணம் பகுதியைச் சேர்ந்தவர் சசி. 54 வயதான இவர், அரசுப் பேருந்து நடத்துனராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று நாகர்கோவிலில் இருந்து சிறமடத்திற்குச் சென்ற பேருந்தில் பணியில் இருந்து உள்ளார். அப்போது பேருந்தில் பயணித்த பள்ளி மாணவி ஒருவருக்கு நடத்துனர் சசி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பள்ளி மாணவி, அடுத்த நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். பின்னர், அவர் பள்ளிக்குச் செல்லாமல் நேராக தனது வீட்டுக்குச் சென்று உள்ளார். பின்னர் நடந்தவற்றை பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், ஊர் மக்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பேருந்து ஞானையாபுரம் வந்த போது பேருந்தை சிறைபிடித்து உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடத்துனர் சசியை பிடித்து பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் சரமாரியாக அடிக்கத் தொடங்கி உள்ளனர். இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூதப்பாண்டி போலீசார், நடத்துனர் சசியை மீட்டு நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: ஏ ஆர் ரகுமானுக்கு பரம்பரை நோய்…உண்மையை உடைத்த பயில்வான் ரங்கநாதன் ..!
இதனையடுத்து, பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நடத்துனர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.