ஸ்ரீபெரும்புதூர் அருகே மதிய உணவில் எலி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற மாணவிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே சிருமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஶ்ரீ (15). இவர் சுங்குவார்சத்திரம் அருகே மொளச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், ஜெயஶ்ரீ சரிவர படிக்காததால் அவரது பெற்றோர்கள் தொடர்ந்து கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், மாணவி ஜெயஶ்ரீ மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்து வந்த ஜெயஶ்ரீ ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி ஜெயஶ்ரீ, வீட்டில் இருந்து எடுத்து வந்த எலி மருந்தை மதிய உணவு சாப்பிடும்போது, உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த திருமங்கலம் கண்டிகை பகுதியைச் சேர்ந்த தோழியான மாணவி ஏகலட்சுமி(15), உன்னுடன் நானும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறி எலி மருந்து கலந்த உணவை ஏகலட்சுமியும் சாப்பிட்டுள்ளார்.
இதைப் பார்த்த சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். உடனே ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலிசார் மொளச்சூர் பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவிகளிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மொளச்சூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவரும் உணவில் எலி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பள்ளி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.